பொன்னமராவதி ஒன்றியம் ஏனாதி வயல் பகுதியில்உள்ள வறண்ட ஆழ கிணற்றில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது.தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் தியாகராஜன் தலைமையில் மீட்புப் படையினர் சடலத்தை மீட்டனர். பின்னர் அது, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது